23 செப்டம்பர் 2012

எனது பயண அனுபவங்கள்-பகுதி-1


                                     அபராதம் செலுத்தினேன்



  இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 2010 ல் முதல் முறையாக புதுடில்லி செல்லக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதுவரை திருப்பதிக்கு வடக்கே சென்றதில்லை. என் மகளுக்கு தலைநகரில் ஒரு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், அதனை முடித்துக்கொண்டு, மூன்று நாட்கள் ஊர் சுற்றிப் பார்த்து வர எண்ணி புறப்பட்டோம்.சனிக்கிழமை இரவு நான், என் மனைவி,மகள் மூவரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து புறப்பட்டோம். திங்கள்கிழமை காலை ஒன்பது மணியளவில் புதுடில்லி வந்தடைந்தோம். நண்பர் ஒருவர் ரயிலில் அறிமுக்மானார்.அவரது உதவியுடன் லாட்ஜ் எடுத்து தங்கினோம். மறுநாள் செவ்வாய்க்கிழமை நேர்முகத்தேர்வு நடைபெற்றது. புதன்கிழமை ஜெய்ப்பூர் சென்று வந்தோம்.

             எங்கள் பயணத்திட்டத்தில் டில்லியை சுற்றிப் பார்ப்பதும் ஆக்ரா சென்று தாஜ்மகாலைப் பார்த்து வருவதும் முக்கியமாக வைத்திருந்தோம். வெள்ளிக்கிழமை ஆக்ரா சென்றுவிட்டு அங்கிருந்து சென்னை வர ஜீ.டி.எக்ஸ்பிரஸ்ஸில் முன்பதிவு செய்திருந்தோம்.

    வெள்ளிக்கிழமைகளில், தாஜ்மகாலுக்கு சென்று பார்க்க அனுமதி இல்லை, அன்று விடுமுறை நாள் என்பது டில்லி சென்ற பிறகுதான் தெரிந்தது, எனவே பயணத்திட்டத்தில் சிறிய மாற்றம் செய்ய நேர்ந்தது.வியாழக்கிழமை அன்றே ஆக்ரா சென்று வந்து விட்டோம்.(ஆக்ரா அனுபவங்களை பிறகு பார்க்கலாம்).


        வெள்ளிக்கிழமை டில்லியின் முக்கியமான் இடங்களில் சிலவற்றைப் பார்த்துவிட்டு சரியாக மாலை ஆறு மணிக்குப் புறப்படும் ஜீ.டி.எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வந்து சேர்ந்தோம்.ஆக்ராவிலிருந்து சென்னை வருவதற்கு மட்டுமே முன்பதிவு செய்திருந்ததால், டில்லியிலிருந்து ஆக்ராவிற்கு ( சுமார் 200 கிலோமீட்டர் தூரம்) வர முன்பதிவு செய்யாத டிக்கட் மூன்று பேருக்கும் வாங்கினோம். டில்லியில் எங்களுக்கு பல உதவிகள் செய்த ஓட்டல் தமிழ்நாடு நண்பர் (திருநெல்வேலியை சேர்ந்தவர்) சொல்லியதன்பேரில், எங்களுக்கான முன்பதிவு பெட்டியில் ஏறினோம்.எங்கள் இருக்கையைக் கண்டுபிடித்து சென்று பார்த்தால் அங்கே ஏற்கனவே சிலர் அமர்ந்திருந்தனர். விசாரித்ததில் அவர்கள் டில்லியிலிருந்து ஆக்ரா செல்ல முன்பதிவு செய்து  வருவது தெரிந்தது.அவர்களிடம் எங்கள் பயண விவரத்தை சொல்லி எங்களுடைய பொருட்களை அங்கேயே வைத்துக்கொண்டோம். அவர்களுடைய தயவில் இருக்கைகளைப் பகிர்ந்து கொண்டோம்.

         சுமார் மூன்று மணி நேர பயணத்தில் ஆக்ரா நெருங்கிக் கொண்டிருந்தோம். ஆக்ரா வருவதற்கு சற்று முன்னர் டிக்கட் பரிசோதகர் வந்தார்.எங்களுடைய டிக்கட்டுகளையும் பரிசோதித்தார். முன்பதிவு செய்த டிக்கட்டுகளையும், முன்பதிவு செய்யாத டில்லி ரயில் நிலையத்தில் வாங்கிய டிக்கட்டுகளையும் அவரிடம் கொடுத்தேன்.பார்த்துவிட்டு ரூபாய் 265 அபராதம் கட்டச்சொன்னார்.ரசீதை போட்டுக் கொடுத்து விட்டார்.வேறு வழியின்றி அபராதம் கட்டினேன்.

         உடன் வ்ந்த நண்பர்கள் அப்போது சொன்னதுதான் மிகவும் ஹைலைட்."இதுவே ஒரு உ.பி.வாலாவாக இருந்தால் அபராதம் வாங்கிவிட முடியுமா? " அப்போதுதான் உறைத்தது தமிழர்கள் நாம் எவ்வளவு இளிச்சவாயர்களாக இருக்கிறோம் என்பது. வட இந்தியர்கள் பெரும்பாலோர் ரயிலில் பயணம் செய்ய பயண்ச் சீட்டே வாங்குவதில்லை.ரயிலில் கூறைமீது ஏறி பிரயாணம் செய்வது மிகச் சாதாரணம்.ஆயிரக்கணக்கில் ரயிலில் தொற்றிக்கொண்டு செல்கிறார்கள்.சாதாரண பயணச்சீட்டு வாங்கிவிட்டு, முன்பதிவு செய்த பெட்டியில் ஏறிவிடுகிறார்கள்.(என்னைப்போல).ஆனால் அபராதம் எல்லாம் கட்டமாட்டார்கள்.அவர்களிடம் அப்ராதம் எல்லாம் வாங்கிவிட முடியாது என்பதே நிதர்சனம்.

             நான்கூட டிக்கட் பரிசோத்கரிடம் ஏதாவது விவாதம் செய்யலாம் என்றால், ஹிந்தியில் பேசத்  தெரியாது. வடநாட்டவர்கள் ஹிந்தி தவிர வேறு மொழி தெரிந்தாலும், காட்டிக்கொள்ளமாட்டார்கள்.ஹிந்தியில் மட்டுமே பேசுகிறார்கள்.டிக்கட் பரிசோதகரும் வட மாநிலத்தவரே.
            
               முன்பதிவு செய்தபோது சென்னைக்கும் -டில்லிக்கும் வாங்கிய டிக்கட்டைவிட சென்னைக்கும   ஆக்ராவிற்கும் வாங்கிய டிக்கட் ரூபாய் விலை 16 மட்டுமே குறைவு. மூன்று பேருக்கும் சேர்த்து 48 ரூபாய் மட்டுமே குறைவாக் இருந்தது.ஆனால் டில்லியில் நாங்கள் வாங்கிய  சாதாரண டிக்கட் மற்றும் அபராதம் எல்லாம் சேர்த்து 500 ஆகிவிட்டது. முன்பதிவு இல்லாத பெட்டியில் ஆக்ராவரை வந்திருந்தால், அபராதம் கட்டவேண்டி வந்திருக்காது.ஆனால், ஆக்ரா வந்து சேர்ந்தபின்னர் அவசரம் அவசரமாக பெட்டி மாறவேண்டும்.இடம் தான் காலியாக உள்ளதே என்று வேறு யாராவது நம் இடத்தில் அமர்ந்திருந்தால்(வட இந்திய ரயில்களில் சர்வ சாதாரணமாக நடக்கிற நிகழ்வு), அவர்களுடன் மல்லுக்கு நிற்கவேண்டும்(மொழி தெரியாமல்), இதையெல்லாம் யோசித்தே ஹோட்டல் நண்பர் சொன்னதை நாங்களும் ஏற்றுக்கொண்டோம்.விளைவு அபராதம் கட்டியதுதான்.

             அதுவரை ஒரு தொலைபேசி கட்டணமோ, மின்சார கட்டணமோ அபராதத்துடன் கட்டியிராத நான் முதல் முறையாக் அபராதம் கட்டியது முகவும் மன உளைச்சலாக இருந்தது. பயணம் முடிந்து வந்த பின்னரும் சில நாட்களுக்கு அதே நினைவாக இருந்தேன்,அதனால்தான் இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட அந்த நிகழ்வை இங்கே பதிய முடிகிறது.

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

20 ஆகஸ்ட் 2012

தெரிந்ததும் தெரியாததும்- பகுதி 4



                                           பொது அறிவு  செய்திகள்

1.நாயின் மோப்ப சக்தி பற்றி நாம் அறிவோம்.அதனால்தான் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல் துறையினர் மோப்ப நாய்களை பயன்ப்டுத்துகின்றனர். நாயைவிட அதிக மோப்ப சக்தி உள்ள உயிரினம் எது தெரியுமா?---------------------------விலாங்குமீன்.

2.100 அடி உயரத்திலிருந்து குதித்தாலும் காயமின்றி தப்பிக்கும் உயிரினம் எது தெரியுமா?-------------அணில்.

3.பறக்க முடியாத பறவையினம் எது தெரியுமா?------------பெங்குவின்

4.சிங்கம் காட்டுக்கே ராஜா.ஆனால் செந்நாயைக் க்ண்டால் சிங்கம்,  புலி கூட மிரண்டு ஓடும்.

5. நாம் விரல்களை நெட்டி முறிக்கும்போது சத்தம் உண்டாகிறதே அது ஏன் தெரியுமா?---எலும்புகளின் இடையில் உள்ள வாயு குமிழிகள்  உடைவதால்.

6. சமையல் எரிவாயுவில் அதிகம் உள்ள வாயு-----------------மீத்தேன்.

7.உள்ளங்கை, காலில் அதிகளவில் வியர்வை சுரக்க காரணம் என்ன?-----உடலில் உள்ள ல்ட்சக்கணக்கான வியர்வை சுரப்பிகளில், உள்ள்ங்கை ம்ற்றும் உள்ளங்காலில் பாதி அளவு உள்ளன.

8.புரோட்டீன் சத்து அதிக அளவு உள்ள உண்வு எது தெரியுமா?---பட்டாணி

9.வெட்டுக்கிளியின் ரத்தம் வெள்ளை நிறமாயிருக்கும்

10. அணுக்கதிர்களால் அழிக்க முடியாத உயிரினம்-----கரப்பான்பூச்சி

11.வாழைத்தண்டு உடல் ப்ருமனைக் குறைக்க, மலச்சிக்கலை போக்க, உடம்பிலிருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகின்றது.

12. கால்சியம் அதிகம் உள்ள காய்கறி---------------வெங்காயம்.

13. 27,00,000 பவுண்டு நில்க்கரியிலிருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலை ஒரு பவுண்டு யுரேனியத்திலிருந்து பெறமுடியும்.

14.ஆரோக்கியமான் மனிதனின் உடலில் உள்ள ரத்த்த்தின் அளவு---6 லிட்ட்ர்.

15.மனிதனின் நாக்கில் 8000 சுவை மொட்டுகள் உள்ளன்.

16.மனித உடலில் வேர்ககாத பகுதி-----உதடுகள்

17.நாம் ஒரு நாளில் சுமார் 21600 தடவை சுவாசிக்கிறோம்

18.ஒரு பட்டுப் பூச்சிக்கூடு சுமார் 3000 அடி  நீளமுள்ள பட்டு நூலைத்த்ருகிறது.

19.மனித மூளையின் சராசரி எடை 1360 கிராம்.

20.மனித உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன்.


நன்றி--கலைக்கதிர்

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

26 பிப்ரவரி 2012

தெரிந்ததும் தெரியாததும்----பகுதி 3




 
பிழையின்றித் தமிழில் எழுதுவோம்-பேசுவோம்
தமிழில் பிழை அதிகம் நேரும் இடங்கள்:
1.உருவப் பிழை: விரைவாக எழுதும்போது ஏற்படுவது
2.ஒலிப் பிழை: பேசும்போது ஏற்படுவது
3.எழுத்துநிலைப் பிழை: தேவையின்றி,ஒலி உச்சரிப்பை         மனத்தில் கொண்டு செவியுணருமாறு எழுதுகையில் ஏற்படுவது.அதாவது உச்சரிப்பது போலவே எழுதுவதும், வடமொழியில் உள்ளவற்றைத் தமிழில் எழுதுவதும் ஆகிய இரு வகைகளில் இத்தகைய பிழைகள் அடங்கும்.இப்படிப்பட்ட பிழைகளைக் கீழே காண்போம்.
ற்க்கண்டு இங்கே விற்க்கப்படும்.
ட்க்குடியன் குடித்துவிட்டுப் புல்த்தரையில் புரண்டான்.
மேற்க்காணும் அரசு ஆணை தவறானது.
ண்க்காட்சி நடைபெறும்.
மேலே உள்ளவற்றில் இரண்டு மெய்யெழுத்துகள் இணைந்து வந்துள்ளன.தமிழில் இவ்வாறு இரண்டு மெய்யெழுத்துகள் (ய,ர,ழ நீங்கலாக) இணைந்து வாரா.எனவே மேலே கண்ட வாக்கியங்கள் பிழையாகும்.
ய,ர,ழ ஆகிய மூன்று எழுத்துகளை நிலைமொழியாகக் கொண்டு வருமொழி புணரும்போது இருமெய்கள் இணைந்து வரும் சான்று.
       வேய்ங்குழல்,  ஆர்க்காடு ,யாழ்ப்பாணம்
  என வருமிடங்களில் இரு மெய்யெழுத்துகள் இணைந்து வருகின்றன.இவை சரியாகும்.
வடமொழியில் காமாஷி, மீனாஷி  என எழுதுவது பிழையாகும். காமாட்சி, மீனாட்சி ஆகியவையே சரியாகும்.
4.வழக்குப் பிழை: பேச்சு வழக்கு ,பெரும்பாலும் எழுத்திலும் அப்படியே ஏற்படுவது.
பேச்சு வழக்கு                எழுத வேண்டிய முறை
அடமானம்                   அடைமானம்
உத்திரவு                     உத்தரவு
என்னமோ                   என்னவோ
சிகப்பு                       சிவப்பு
நஞ்சை                       நன்செய்
இவை போல்வன நூற்றுக்கணக்கில் உள்ளன.                     
5.ஒற்றுப் பிழை: வல்லெழுத்துக்கள்,நிலைமொழி+வருமொழி புணரும்போது ஏற்படுவது.சொற்களுக்கிடையில் வல்லின எழுத்துத் தோன்றுவதும் தோன்றாமையும் முறையே வல்லெழுத்து மிகுதல், மிகாமை எனக் கூறப்பெறும் ஒற்றுப் பிழை  எற்படுதற்கு, க, ச, த, ப ஆகிய நான்கு வல்லின எழுத்துகள் காரணமாகின்றன.
வல்லெழுத்து மிகுமிடங்கள்:
1.நிலைமொழி ஈற்றில் நிற்கும் உயிரின் முன் க,ச, த, ப ஆகிய வல்லெழுத்துகள் மிகும்
(எ.கா) குட்டிப்பையன், கோழிக்கறி
2.வினையெச்சத் தொடரில் மிகும்.
(எ.கா) ஓடிச்சென்றான், தேடிப்பார்
3.பண்புத் தொகையில் மிகும்
(எ.கா) மாசித்திங்கள், பாசிக்கரை
4.இரண்டாம் வேற்றுமை விரியில் மிகும்
(எ.கா) அவனைக்கண்டேன், இராமனைத்தேடிய சீதை
5.மூன்றாம் வேற்றுமை மிகும்
(எ.கா) அவனுக்குக் கொடு, பாட்டுக்குக் கூத்து
6.உவமைத்தொகையில் மிகும்
(எ.கா) கிளிப்பேச்சு, மலர்க்கை
7.வன்றொடர்க் குற்றியலுகரத்தில் மிகும்
(எ.கா) ஆற்றுப்பக்கம், சோற்றுக்கூட்டம்
8.மென்றொடர்க் குற்றியலுகரத்தில் மிகும்
(எ.கா) நஞ்சுப்பார்வை, அன்புக்கரங்கள்
9.ய,ர,ழ எழுத்து நிலைமொழியில் இருப்பின் மிகும்
(எ.கா) வாய்ப்பேச்சு, ஆர்க்காடு, யாழ்ப்பாணம்
10.ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மிகும்
(எ.கா) பாடாப்பைங்கிளி, தேடாச்செல்வம்
11.சுட்டுவினாப் பெயர்களில் மிகும்
(எ.கா)அங்குக் கண்டாய், இங்குப் பெற்றாய்,எங்குப் போனாய்?
12.மற்ற,மற்று,மற்றை என்ற இடைச் சொற்களில் மிகும்
(எ.கா) மற்றக் குழந்தைகள், மற்றுச் சொல்,மற்றைப் பையன்
13.ஆக, போய், ஆய் என்ற வினையெச்சச் சொற்களுக்குப் பின் மிகும்
(எ.கா) நன்றாகப் பாடு, போய்ச் சொல், நல்லதாய்ப் போயிற்று
வலிமிகா இடங்கள்:
1.எதிர்மறைப் பெயரெச்சத்தில் மிகாது
(எ.கா) தாக்காத கணைகள். விடியாத பார்வை
2.உம்மைத் தொகையில் மிகாது
(எ.கா) கொய்து தின்றான், வந்து பார்த்தான், மென்று சுவைத்தான்
3.வினைத் தொகையில் மிகாது
(எ.கா)திரைகடல்,அலைகடல், வளர்பிறை
4.அத்தனை,இத்தனை,எத்தனை என்ற தொகுதிச் சொற்கள் வருமிடத்து மிகாது
(எ.கா) எத்தனை பறவைகள், அத்தனை பார்வை
5.படி என்ற இடைச் சொல்லின் பின் மிகாது.
(எ.கா) வரும்படி பேசு, கேட்கும்படி சொல்.
6.எவ்வளவு என்ற அளவைச் சொல் பின் மிகாது.
(எ.கா) எவ்வளவு தடை, எவ்வளவு பணம்
7.மென்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் மிகாது.
(எ.கா) அரும்பு சூடு, குரங்கு தின்றது.
8.ஓடு, ஒடு என்ற மூன்றாம் வேற்றுமையின்கண் மிகாது.
(எ.கா) அவனோடு செல், அவனொடு போராடு
9. உயர்திணைப் பொதுச் சொற்களின் ஈற்றில் ‘ர’ ஒற்றுக்குப்பின் வருமிடங்களில் மிகாது
(எ.கா) மகளிர் குழு, தமிழர் பண்பாடு, ஆடவர் கழகம்

6.அறியாப் பிழை: இலக்கணம் அறிந்திருந்தும்கூட நம்மில் எத்தனைப் பேர் தவறில்லாமல் எழுதுகிறோம்? எப்படியாவது எங்காவது தவறு நேர்ந்து விடுகிறதே! நாம் அறியாமல் செய்யும் பிழையே அறியாப் பிழை ஆகும்.
(எ.கா)
பிழை                      சரி
அருகாமையில்              அருகில்
முயற்சித்தான்               முயன்றான்
பேச்சுவார்த்தை நடந்தது      பேச்சுவார்த்தை நிகழ்ந்தது
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்---தமிழ் நாட்டுப் பாடநூல்
                           நிறுவனம்

7.பொதுப்பிழை: ஒரு, ஓர் என்பதிலும், ஒருமை, பன்மை ஆகிய இடங்களில் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய இடங்களில், தான், தாம் ஆகிய இடங்களில் எற்படுகிற பிழைகளைப் பொதுப் பிழைகளாகக் கருதலாம்.
ஒரு/ஓர்
வருமொழியில் உயிர் எழுத்து வருமானால் ஓர் என வரவேண்டும்.(எ.கா) ஓர் அலகு, ஓர் அளவு, ஓரிலக்கு
வருமொழியில் மெய்யெழுத்து வரின் ‘ஒரு’ இட்டு எழுத வேண்டும்.(எ.கா) ஒரு பறவை, ஒரு மரம்
ஒருமை, பன்மை (எ.கா)
அரசு ஒன்று கூடிக் கலந்து பேசின------   பிழை
அரசு ஒன்று கூடிக் கலந்து பேசியது------- சரி
கன்றுகள் வந்த வண்ணம் உள்ளது---------- பிழை
கன்றுகள் வந்த வண்ணம் உள்ளன.----------சரி
நிகழ்ச்சிகள் தொடங்கியது-----------------------பிழை
நிகழ்ச்சிகள் தொடங்கின--------------------------சரி
மேய்வன ஆடுகள் அன்று---------------------பிழை
மேய்வன ஆடுகள் அல்ல----------------------சரி
தன்மை, முன்னிலை, படர்க்கையில் அல்ல என்ற எதிமறைச் சொல்லைப் பயன்படுத்தும்போது நான் அல்ல, நீ அல்ல, அவன் அல்ல எனக் கூறுதல் பிழை. நான் அல்லேன், நீ அல்லை, அவன் அல்லன் என எழுதவேண்டும்.

------------------------------நன்றி ----------------------
தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

24 ஜனவரி 2012

தெரிந்ததும் தெரியாததும்


தெரிந்ததும் தெரியாததும்(பகுதி-2)


மனித மேம்பாட்டுக் குறியீடு என்றால் என்ன?

          சுகாதாரம் , கல்வி, வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட அவசியத் தேவைகளுக்கு மக்கள் செலவிடும்  தொகையின் அளவே மனித மேம்பாட்டுக் குறியீடு ஆகும். இத்தொகை அவரவர் வருமானத்தைப் பொருத்தே அமையும். வளர்ந்த நாடுகளில் இக்குறியீடு மிகவும் உச்சத்தில் உள்ளது.

மனித மேம்பாட்டுக் குறியீடு நம்ம ஊரில் எப்படியிருக்கிறது?   
      மனித மேம்பாட்டுக் குறியீட்டில் சென்னை மாவட்டம் (0.842) புள்ளிகளுடன் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது. தருமபுரி(0.656), கிருஷ்ணகிரி(0.665), விழுப்புரம்(0.667) முதலிய மாவட்டங்கள் கடைசியில் உள்ளன.ஒரு புள்ளியைப் பெற்றால் அந்த மாவட்டம் சிறந்த மாவட்டமாக கருதப்படும். நம்ம நாகை மாவட்டம் (0.738) புள்ளிகள் பெற்றுள்ளது.
தனிநபர் வருமானம் நம்ம ஊரில் எப்படியிருக்கிறது?
முதலிடத்தில் உள்ள சென்னையில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ.5,496.88 ஆகவும், வறுமை சதவீதம் 10.2 ஆகவும் உள்ளது.தொழில் வளர்ச்சி பெற்ற தூத்துக்குடியில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ.3,928.26 ஆகவும், வறுமை சதவீதம் 35.00 ஆகவும் உள்ளது.  நாகை மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ.2576/- ஆகவும், வறுமை சதவீதம் 10.9 ஆகவும்  உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ.2341/- ஆகவும், வறுமை சதவீதம் 16.6 ஆகவும்  உள்ளது. { நம்ம ஊரு கிராம நிர்வாக அதிகாரிகிட்ட போயி  ஆண்டு வருமானம் ரூ.2341/- என்று சொல்லி வருமானச்சான்று கேட்டால் கொடுப்பாரா? ஆனால் அது தான் நிஜம் என்று மத்திய அரசின் புள்ளியியல் துறை சொல்லுதுங்கோ!}  தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை போன்ற வடமாவட்டங்களில் வறுமை 45 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.
விவசாயத்தை விட்டுடாதிங்க!
                 நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வறுமை சதவீதம் குறைவாக இருப்பதற்கு காரணம் விவசாயம் தான். தொழில் வளர்ச்சி பெற்றுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் வறுமை சதவீதம் மிகுதியாக உள்ளது.இதிலிருந்து என்ன புரியுது? தொழில் வளர்ச்சியால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே பயன் பெறுகின்றனர்.{பணக்காரன் மேலும் மேலும் பணக்காரன் ஆவான் அவ்வளவுதான்!}ஆனால் விவசாயம் செய்வோரின் ஆண்டு வருமானம் குறைவாக இருந்தாலும், வறுமை அதிகமாக இல்லை. வடமாவட்டங்களில் தொழிலும் இல்லை, விவசாயமும் இல்லை.அதனால்தான் வறுமை அதிகமாக உள்ளது.
---------------நன்றி - தினமணி --------





தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

18 ஜனவரி 2012

தெரிந்ததும் தெரியாததும்

 
சந்திரரே,சூரியரே!
1.  சூரியன் உதிக்கிறது என்பதும், சூரியன் மறைகிறது என்பதும்  வெறும் மாயை. தினசரி சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்பதையும் நாம் பள்ளிப்பாடத்தில் படித்துள்ளோம்.அவ்வாறு பூமி சூரியனை சுற்றி வருவதால் தான் இரவு பகல் உண்டாகிறது. அப்பொழுது சூரியன் உதிப்பது போலவும், மறைவது போலவும் நமக்கு காட்சியளிக்கிறது. மற்றபடி, சூரியனிடம் தினசரி எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை.
2.  சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் இருந்தால்         அது சூரிய கிரகணம்.பூமிக்கு இருபுறமும் சந்திரன் சூரியன் இருந்தால் அது சந்திர கிரகணம்.
3.    லூனார் மாதம் என்பது ஒரு முழு நிலவுக்கும் அடுத்த முழு நிலவுக்கும் இடைப்பட்ட நாட்கள். அதாவது (29 1/2) நாட்கள் ஆகும்.
4.  மரங்கள் இலைகள் மூலம் சூரிய ஒளியை உள்வாங்கும் தன்மை உடையவை.அந்த ஆற்றலைப் பயன்படுத்தி தனக்குத் தேவையான உணவை தயார் செய்கின்றன.அதேபோல, செயற்கை சூரிய மரங்கள் மூலம் சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றமுடியும். அதற்கு இரும்பு மரத்திலான தூணைப் பயன்படுத்தி இலைகளுக்குப் பதிலாக 2x2 சதுர அடி பரப்பளவு கொண்ட சூரியப்பலகைகளை தூணில் பொருத்தி சூரியக் கதிர்களை உள்வாங்க வைக்கவேண்டும். இரும்பு மரத்தின் நீளம் 50 முதல் 70 அடி வரை இருக்கலாம்.அடித்தளம் 2x2 அல்லது 3x3 சதுர அடி இருக்கலாம். 40 முதல் 50 சூரியப்பலகைகளை இரும்புத்தூணைச் சுற்றிலும், கிளைகள் அமைத்து அதனுள்ளும் பொருத்தலாம். சூரியப்பலகைகள் அதிக அளவு சூரியக் கதிர்களை உள்வாங்குவதற்கு ஏற்றாற்போல அமைக்கவேண்டும்.செயற்கை சூரிய மரங்கள் மூலம் புவிக்கு எந்தவொரு தீங்கும் இல்லாமல் மின்சாரம் தயாரிக்க முடியும்.
5. இரவில் விண்மீன்கள் கண் சிமிட்டுகின்றன அல்லவா! உண்மையில் அவை கண் சிமிட்டுவதில்லை.அதுவும் ஒரு மாயத்தோற்றந்தான்!அதேபோல பறக்கும்தட்டு என்பதும் கோள்களின் ஒரு மாயத்தோற்றந்தான். இந்த மாயத்தோற்றங்களைக் கொடுப்பதில் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்கள் முதலிடம் வகிக்கின்றன.சில சமயங்களில் வால் வெள்ளிகள் எனப்படும் தூமகேதுக்களும் மாயத்தோற்றங்களைக் கொடுக்கின்றன. இந்த கோள்கள் அவற்றின் சுழற்சிப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வருகையில், சூரிய ஒளி அதன்மேல் பட்டுத் தெறிக்க, முகில்களின் இடைஞ்சலும் பகற் பொழுதிலோ,  அந்திவேளையிலோ இந்தக் கோளின் மேல் ஒன்றாக இணைய, அது பல நிறங்களில் தோன்றுவதும் மறைவதும் போல் மாறி மாறி காட்சியளிக்கும். இந்த மாயத்தோற்றந்தான் நாம் பறக்கும்தட்டு என்று நினைத்துக் கொண்டிருப்பவை.


தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!