29 டிசம்பர் 2011

மருத்துவம்-நமது உடல் பற்றிய குறிப்புகள்


ரத்தம் :மனித ரத்தத்தில் கார்பன் -டை- ஆக்சைடு அதிகமாகி மூச்சுத்  திணறும்போது சிவப்பு ரத்தம் நீல நிறமாக மாறும்.

செல்கள்: நமது உடலில் செல்கள் மிகவும் சிறியவை.இரண்டு லட்சம் செல்களை  ஒரு குண்டுசியில் குத்திக்   கொள்ளலாம் .

சிறுநீரகக்  கற்கள் :  சிறுநீரகக் கற்களில் பெரும்பான்மையானவை    கால்சியம் ஆக்சாலேட் கற்களாகவே உள்ளன .இது தவிர யூரிக் ஆசிட் கற்களும் கணிசமான அளவில்  உள்ளன.

ரத்த அழுத்தம் :  தினசரி சிறிதளவு சாக்லேட் சாப்பிட்டு வருவதால் ரத்த ஓட்டம் சீராகி ,அழுத்தம் குறைந்து விடும் .சாக்லேட்டில் உள்ள "ப்லேவனாய்ட்" என்ற  ரசாயனப் பொருள் அடைபடும் ரத்த தமனிகளை திறக்க செய்வதில் சிறப்பாக செயல் படுகிறது .அடைபட்டிருக்கும் ரத்தம் இளகி சீராக ஓடுவதற்கு அது ஊக்குவிக்கிறது .
                        
        


 






    




 







தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

28 டிசம்பர் 2011

துளசியின் மருத்துவ பயன்கள்


1.துளசி இலைகளைத்  தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராது.ஜிரண சக்தியும் புத்துணர்ச்சியும் துளசி இலைகள் மூலம் பெறலாம்.வாய்  துர்நாற்றத்தைப்  போக்கும்.நமது உடலுக்கான கிருமிநாசினியாக துளசியை உட்கொள்ளலாம்

2. துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் நம்மை அண்டாது.

3.வியர்வை நாற்றத்தை  தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே  கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் மணக்கும்
.
4.துளசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மை போல அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி , படை  சிரங்குகள் கூட மறைந்துவிடும்.

5.துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வந்தால் சிறுநீ ர்க்கோளாறு மறையும் .

6.துளசி சாற்றுடன் எலுமிச்சசை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

7.சுத்தமான மண்பானைத் தண்ணீரில் துளசி இலைகளை ஊறப்போட்டு அந்தத்  தண்ணீரை குடித்து வந்தால் எந்த நோயும் அண்டாது .


8. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மைப் பல நோய் களிலிருந்து காக்கிறது .

9.வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலை சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும் ,


10.வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களைக் கட்டி வைத்தாலும் வீட்டை சுற்றிலும் துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள், பூச்சிகள், பாம்புகள் முதலியன வராது (இதனால்தான் வீடுகளில் துளசிமாடம் வைத்து துளசி செடிகளை வளர்க்கிறார்களோ !)  -----நன்றி  தினமணி

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

22 டிசம்பர் 2011

ஆன்மிக கருத்துகள்

1 . கடமைகளை ஆற்றாமல்  அவற்றின் பயன்களை
     அனுபவிப்பவன் திருடன்.
2. பகவானுக்கு கர்மங்களே  கிடையாது .ஆயினும் அவரும்
     உலகிற்கு வழிகாட்டியாக   கர்மங்களை  ஆற்றுகிறார்
3 .கர்மங்கள் அனைத்தின் பயன்களையும் துறப்பதே தியாகம் ஆகும்.
                                                                                            -- பகவத் கீதை 
 



தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!!

17 டிசம்பர் 2011

புதிய பூ இது

நண்பர் நிஜாம் அவர்களின் ஆலோசனையின் படி புதிய வலைப்பூ தொடங்கியுள்ளேன் .அன்பர்கள் ஆலோசனைகளும் கருத்துக்களும்  வழங்கிடுமாறு வேண்டுகிறேன்   

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்தை தெரிவித்துச் செல்லலாமே!
 

வாருங்கள்!


நல்வரவு!